புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி- இந்தியா நான்காவது இடத்தில்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் கண்காட்சிக் கூட்டத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் மோடி கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் குறித்த துறையில் இரண்டரை மடங்கு நாட்டின் செயற்திறனை இந்தியா அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2000 கோடி டொலர் மதிப்பில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.