புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் கண்டெடுப்பு – பொலிஸார் தீவிர விசாரணை

புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மலேரியா கால்வாயில் வீசப்பட்ட நிலையில் சந்தேகத்திட்கிடமான பொதியொன்னை பொலிஸார் கண்டெடுத்தனர்.
அதனை சோதனையிட்ட போது T-56 ரக துப்பாக்கிகள் இரண்டினை பொலிஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.