புத்தாண்டில் கடமைகளை ஏற்றுக்கொண்டது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் !
In இலங்கை January 4, 2021 7:35 am GMT 0 Comments 1444 by : Jeyachandran Vithushan

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் புத்தாண்டில் தமது கடமைகளைத் தொடங்கியுள்ளது.
கட்சியின் பொது பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து இன, மதங்களையும் பாதுகாக்கும் அதேவேளை அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என கூறினார்.
மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு தற்போது பொதுமக்கள் கடும் சுமையை கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.