புனித ரமழான் நோன்பு ஆரம்பம்
In இலங்கை May 7, 2019 2:02 am GMT 0 Comments 2605 by : Yuganthini
இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ரமழான் நோன்பினை அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் ரமழான் மாத நோன்பினை அவர்கள் அனுஷ்டிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலை பிறை தென்படாதமையால் இன்று முதல் நோன்பினை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு, முஸ்லிம் மக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தது.
மேலும் பள்ளிவாசல்களில் தொழுகை செயற்பாடுகளில் ஈடுபடும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த குழு அம்மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.