முகத்தை மறைக்கின்ற ஆடைகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை!
In இலங்கை April 28, 2019 4:59 pm GMT 0 Comments 3111 by : Jeyachandran Vithushan
புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
தேசிய பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் அனைத்து உடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, அவசரகால நிலையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த நாட்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.