பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி செட்டியார் தெரு வர்த்தகர்கள் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மலையகத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செட்டியார் தெருவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் கொழும்பு − ஐந்துலாம்பு சந்தியில் தற்போது பதாகைகளை ஏந்தி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.