பெல்ஜியத்திலும் கொரோனா வைரஸ் பரவியது: ஒருவர் இலக்கு

பெல்ஜியத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவர் இலக்காகி இருப்பதாக, பெல்ஜியத்தின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒன்பது பேரில் ஒருவருக்கே, இவ்வாறு நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேகி டி பிளாக் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஒன்பது பேருக்கும், தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் எட்டு பேருக்கு எதிர்மறையான அறிகுறிகளும், ஒருவருக்கு நேர்மறையான அறிகுறியும் தென்பட்டுள்ளது.
எனினும், நேர்மறையை பரிசோதித்த நபர் குறித்து எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை தெரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரை, 425 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.