பேரணிக்கு அழைப்பு விடுத்தமை பொருத்தமானது – ட்ரம்ப்
In உலகம் January 13, 2021 4:27 am GMT 0 Comments 1360 by : Jeyachandran Vithushan

நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுத்தமை முற்றிலும் பொருத்தமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை முன்னெடுத்து தமது ஆதரவை வெளிப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கடந்த 6 ஆம் திகதி அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட பேரணியின் காரணமாக அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையில் 5 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
எனினும் தனது கருத்து எந்தவிதத்திலும் தவறானது அல்ல என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் முன்னெடுத்துள்ள செயற்பாடு கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.