News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரம்: ஆளுநரை கண்டிக்கிறார் முத்தரசன்

பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரம்: ஆளுநரை கண்டிக்கிறார் முத்தரசன்

In இந்தியா     September 14, 2018 11:53 am GMT     0 Comments     1506     by : Kemasiya

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை குறித்து, மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை அனுப்பியுள்ளமை உள்நோக்கம் கொண்டதென, இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர், “தமிழக அரசின் தீர்மானத்திற்கும் தமிழக மக்களின் உணர்விற்கும் ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்வது தொடர்பில், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில், குறித்த ஏழுபேரையும் விடுதலை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்  தாடர்ந்து குறித்த தீர்மானத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியம் என்பதால் தமிழக அரசு ஆளுநரின் பதிலுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனையை நாடியுள்ளார்.

இதை கண்டித்து பலரும் கருத்துரைத்து வரும் நிலையில்,  இரா.முத்தரசன் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோற்றுவிட்டது – மன்மோகன் சிங்  

    இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பிரதமர்

  • ஆளுநருக்கு மற்றொரு தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன் – வேல்முருகன்  

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை தமிழக அரசு அன

  • எழுவர் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும் – அற்புதம்மாள்  

    ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும் என்றும், பா.ஜ.க.வ

  • மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் ஆந்திரா!  

    மத்திய அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட

  • ராஜீவ் கொலை சந்தேகநபர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள்  

    ராஜீவ்காந்தி கொலை வழக்கின் ஏழு சந்தேகநபர்களையும் விடுவிப்பதற்கு தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டுமென ப


#Tags

  • இரா.முத்தரசன்
  • பன்வாரிலால் புரோஹித்
  • புதுக்கோட்டை
  • பேரறிவாளன்
  • மத்திய அரசு
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.