பொதுபோக்குவரத்தில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு உரிய சுகாதார நியமங்களை பின்பற்றாத வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வாகன ஆசனங்களுக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.