பொலிஸாரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு -இருவர் கைது
In இலங்கை April 28, 2019 8:03 am GMT 0 Comments 2217 by : Dhackshala

தவுஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீமின் சாரதி மொஹமட் செரீப் வழங்கிய தகவல்களுக்கமைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய, அம்பாறை நிந்தவூர் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து, வவுணதீவு பொலிஸாரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.