போராடி வெற்றியை சுவீகரித்த சிமோனா ஹாலெப்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2 ஆம் சுற்றுப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனை ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் – 98 ஆவது இடத்திலுள்ள பிரான்ஸ் வீராங்கனையான ஒசேய்ன் டோடின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்யில் இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். இறுதியில், 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹாலெப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.