போலந்தில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக, பத்து இலட்சத்து 13ஆயிரத்து 747பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் போலந்தில் மொத்தமாக 18ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 13ஆயிரத்து 855பேர் பாதிக்கப்பட்டதோடு 609பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 72ஆயிரத்து 559பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 23பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஆறு இலட்சத்து 22ஆயிரத்து 980பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.