மகனை மரணத்தின் வாசல்வரை கொண்டு சென்ற தாய்!- பிரித்தானியாவில் சம்பவம்
In இங்கிலாந்து September 15, 2018 11:07 am GMT 0 Comments 1855 by : Farwin Hanaa

யூ ரியூபில் சாகச காணொளியொன்றினைப் பதிவிடுவதற்காக தாயொருவர் தனது மகனை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்ற சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
நொட்டிங்ஷயர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 11 வயது மகனான டைலர் புரூமை சைக்கிளின் பின் சில்லை மட்டும் கொண்டு செலுத்துமாறும் அதனைத் தான் படம் பிடித்து யூ ரியூபில் பதிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி செயற்பட்ட மகன் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதனை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
டைலர் புரூமிற்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், ஜீ ஃபோர்ஸ் போர் விமானத்தில் காயமடைந்த போர்வீரன் கொண்டுள்ள படுகாயங்களை ஒத்த காயங்களுக்கு குறித்த சிறுவன் உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சிறுவன் உயிர்பிழைத்தமை அவனுடைய அதிஷ்டம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தான் செய்தது போன்ற முட்டாள்தனமான செயலை இனிமேல் யாரும் செய்ய வேண்டாமென குறித்த சிறுவனின் தாய் டவுன் ஹொலிங் வேர்த் ஊடகங்களின் ஊடாக பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.