News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மட்டக்களப்பை வதைக்கும் டெங்கு நோய்!

மட்டக்களப்பை வதைக்கும் டெங்கு நோய்!

In இலங்கை     March 15, 2018 10:40 am GMT     0 Comments     1171     by : Anojkiyan

இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரச்சினைகள் காரணப்படுகின்றன. டெங்கு அதிகளவில் காணப்படுகின்றன. அதனை தவிர அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளது. அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

டெங்கு தொடர்பில் இலங்கை முழுவதிலும் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலாவது இடத்தினை கொழும்பு உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்று வரையில் 1985பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் நேற்றுவரையில் 1260பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மண்முனை வடக்கு பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 248பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும் மண்முனை வடக்கு பிரதேசத்தில் எந்த மரணச்சம்பவங்களும் இடம்பெறவில்லை.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதியியில் நுளம்பு பெருக்கமான பகுதிகளில் அழிக்கப்பட்டன. அப்பகுதியில் புகையிடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரையில் ஆறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 38பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு 14பேர் இனங்காணப்பட்டுள்ளனர்” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்  

    வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்

  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!  

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்

  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு  

    நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாத

  • கனரக ஆயுதங்களால் முடியாததை கடதாசி மட்டைகளினால் சாதிக்க முடியுமா? – துளசி  

    கனரக ஆயுதத்தை வைத்து சண்டை பிடித்த போதே இராணுவத்தை வெளியேற்ற முடியாமல் போய்விட்டது தற்போது கடதாசி மட

  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு  

    மட்டக்களப்பு – மண்முனை பிரதான வீதி ஒல்லிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர


    பிந்திய செய்திகள்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
    நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.