News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
  • பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

In இலங்கை     October 18, 2018 1:57 am GMT     0 Comments     1697     by : Benitlas

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான காபன் சோதனைக்காக அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வழிநடத்தும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு நிறுவகத்திற்கு மனித எச்சங்களின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 185 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித புதைகுழி அடையாளங் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மனித புதைகுழியை அகழ்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

நீதிமன்ற அனுமதிக்கமைய கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வுப் பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய நிபுணர் உள்ளிட்ட சட்ட வைத்தியர்கள், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினமும்(வியாழக்கிழமை) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)  

    மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்ன

  • கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?  

    மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை மன்னார் நீதிமன்றத்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு  

    மன்னார்  2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்

  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்  

    வடக்கில் ஏற்பட்டிருந்த 30 வருட கால யுத்தம் காரணமாக கைத்தொழில் வளர்ச்சி பூச்சியத்தை விட தாழ்ந்த மட்டத

  • தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்  

    தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சிய


#Tags

  • Human bones
  • mannar
  • mannar human grave
  • rain
  • Skeletons
  • எலும்புக்கூடுகள்
  • மனித எலும்புகூடு
  • மன்னார்
  • மன்னார் மனித புதைகுழி
  • மழை
    பிந்திய செய்திகள்
  • ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
    ‘முத்தலாக்’ தடை சட்டம் மூன்றாவது முறையாக பிரகடனம்
  • பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
    பொறியியலாளராகிறார் சன்னி லியோன்!
  • பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
    பிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.