News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மன்னார் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2ஆவது நாளகவும் தொடர்கிறது

மன்னார் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2ஆவது நாளகவும் தொடர்கிறது

In இலங்கை     September 7, 2018 8:39 am GMT     0 Comments     1853     by : Yuganthini

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது நேற்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று ஆரம்பித்த குறித்த பணிப்புறக்கணிப்பினை  2ஆவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில், கர்ப்பிணி தாய் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். இருப்பினும் குழந்தை இறந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்ட தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும் சம்பவத்தை அறிந்தவுடன், பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியையும் பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தை அறிந்த பொலிஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி மற்றும் மகப்போற்று வைத்திய நிபுணர் ஆகியோர், குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லையென எழுத்து மூலமாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் இன்றும் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை தொடர்ந்துள்ள நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர்கள், வைத்திய நிபுனர்கள் கலந்து கொண்டதோடு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமது தாய் சங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தாங்கள் குறித்த பணிப்பகிஸ்கரிப்பை தொடர்வதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பை சுமூகமான நிலமைக்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தையை தாம் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள் ஆகியோர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

எனினும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுருத்தல்கள் இருப்பதாகவும், இது தொடர்பான சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்  

    கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை

  • மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு – உப்போடையில் உள்ள தனியார் விடுதியில், மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கவேண்டாம் என

  • மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்  

    மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக, மட்டக்களப்பு நகர முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட

  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)  

    மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்ன

  • வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்  

    இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட மு


#Tags

  • doctors
  • mannar
  • protest
  • போராட்டம்
  • மன்னார்
  • வைத்தியர்கள்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.