மருதனார்மட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மருதனார்மட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வு கூடத்தில் செய்யப்பட்ட 110 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்போது இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் உடுவில் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக மருதனார்மட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.