மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் – பெங்கமுவே நாலக்க தேரர்

இலங்கையில் மருந்து பொருளாக, கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் வலியுறுத்தியுள்ளார்.
வௌ்ளைக்காரர்கள் அனுமதி இன்றி, கஞ்சா பயிரிடவும் பயன்படுத்தவும் முடியாது என்றே, தடை விதித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடந்த 1984ஆம் ஆண்டு, எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாது என, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கஞ்சா என்பது மருந்து பொருள் என்றும் புத்த பெருமான் இதை மருந்து பொருளாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏன் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்தி நோயாளர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மருந்துக்கு தேவையான கஞ்சாவை பயிரிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.