மறு அறிவித்தல்வரை கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல்வரை இவ் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இரவு 8 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கண்டி மெணிக்ஹின்ன பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்த குழுவினரை, வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பொலிஸார் அங்கிருந்து விரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.