மலையக தோட்ட தலைவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
In இலங்கை September 10, 2018 7:35 am GMT 0 Comments 1529 by : Yuganthini

மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தலைவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கிடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நுவரெலியா- மஸ்கெலியாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக உயர் உறுப்பினர்கள் உட்பட பிரதேச தோட்ட தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.