மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

வளிமண்டலத்தில் காணப்படும் தாழ்மட்ட இடையூறு காரணமாக மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை முதல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்குரிய நடவடிக்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.