மஹர கைதிகளின் தகனத்திற்கு எதிரான வழக்கு : டிசம்பர் 11 வரை ஒத்திவைப்பு
In இலங்கை December 4, 2020 9:08 am GMT 0 Comments 1558 by : Jeyachandran Vithushan

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையால் கொல்லப்பட்ட கைதிகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகி இறந்த கைதிகளின் தகனத்திற்கு எதிராக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
குறித்த வழக்கு வத்தளை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இறந்த கைதிகளை அடக்கம் செய்வது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள கோவிட் -19 தடுப்பு வழிகாட்டுதல்கள் சட்டரீதியான தடையாக உள்ளன மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.
ஆனால் உடல்களை தகனம் செய்வது இறந்தவர்கள் மீதான விசாரணைகளுக்கு ஒரு தடையாக இருக்கும், மேலும் குற்றவாளிகள் வழக்குத் தொடர வழிவகை செய்யும் என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை காரணங்களால் காலமான கொரோனா தொற்று நோயாளிக்கு சுகாதார வழிகாட்டுதல்கள் கடைபிடிக்க முடியும் என்றாலும் கொலை போன்ற குற்றவியல் விடயங்களில் இணைக்கப்படக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
இருப்பினும் குறித்த வழக்கினை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.