மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு
In இலங்கை November 30, 2020 10:13 am GMT 0 Comments 1473 by : Dhackshala

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று மதியம் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.