News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மாகாண சபை தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் – வே.இராதாகிருஸ்ணன்

மாகாண சபை தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் – வே.இராதாகிருஸ்ணன்

In இலங்கை     October 9, 2018 9:18 am GMT     0 Comments     1402     by : Benitlas

மாகாண சபை தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜராமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு திட்டம்’ எனும் தொனிப்பொருளில் சுய தொழில் செய்பவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘இந்தியா இலங்கையுடன் 1987 ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்திற்கு அமைவாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

இந்த மாகாண சபை உருவாக்கப்பட்டதனால் தான் இன்று நுவரெலியா மாவட்டத்தில் 17 உறுப்பினர்கள் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் கிட்டதட்ட 12 உறுப்பினர்கள் தமிழ் உறுப்பினர்கள் வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

மத்திய மாகாண சபையின் காலம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் வடக்கு, வடமேல் ஆகிய மாகாண சபைகளின் காலமும் முடிவடையவுள்ளது.

மலையக மக்களின் கோரிக்கைக்கு அமைய பழைய முறைப்படியே தேர்தலை நடத்தப்பட வேண்டும். பிரதேச சபைகளின் தேர்தல் முறைமை புதிய முறையில் நடந்ததனால் நாம் அதிகளவில் பாதிக்கப்பட்டோம். இதனால் உருப்படியான சபையை அமைக்க முடியவில்லை.

பணம் இருந்தால் சபையை அமைக்கும் நிலையே காணப்பட்டன. அங்கத்தவரை விலைக்கு வாங்கலாம், அரசாங்கத்தின் நோக்கம் காசு அதிமாக செலவு செய்யக்கூடாது.

மக்களுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கக்கூடாது. நேர்மையான முறையில் போக வேண்டும் என்பது தான். நடந்து முடிந்த உள்ளுராட்சியில் இதற்கு மாறாக நடைபெற்றது. எனவே மாகாண சபை தேர்தல் பழைய முறையிலேயே நடத்தபட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புல்வாமா தாக்குதலுக்கு சீனா கண்டனம்!  

    ஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவ

  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்  

    பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தியாவின் கூடுதல் நீரை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக போ

  • பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா?  

    இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்து

  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!  

    யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை

  • பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் நிறுத்த வேண்டும் : கங்குலி  

    புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் இந்தியா நிறுதிக்கொள்ள வேண்டும்


#Tags

  • இந்தியா
  • இலங்கை
  • மாகாண சபை தேர்தல்
  • வே.இராதாகிருஸ்ணன்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.