News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மின்சாரம், நீர் கட்டணங்களும் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஒன்றிணைந்த எதிரணி

மின்சாரம், நீர் கட்டணங்களும் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஒன்றிணைந்த எதிரணி

In இலங்கை     July 12, 2018 12:43 pm GMT     0 Comments     1384     by : Litharsan

எரிபொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களின் விலைகளும் வெகுவிரைவிலேயே அதிகரிக்கப்படவுள்ளதென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயமானது அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கம் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

ஏனெனில், அந்தளவுக்கு மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியின் தாக்கத்தை இன்று அனைவரும் அனுபவித்து வருகிறார்கள். இதனால், ஏற்பட்ட வாழ்க்கைச்செலவை ஈடுசெய்ய இந்த அரசாங்கத்துக்கும் இதுவரை முடியாமலுள்ளது.

ஆனால், மத்திய வங்கிப் பிணை முறி மோசடியின் பிரதான குற்றவாளியாக அர்ஜுன மகேந்திரனை இந்த அரசாங்கம் ஒருபோதும் நாட்டுக்குக் கொண்டுவராது. அவரை நாட்டுக்கு கொண்டுவந்தால் பிரதமரும் சிக்கிக் கொள்வார் என்பதால் அரசாங்கம் ஒருபோதும் அதனை மேற்கொள்ளாது.

அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் இல்லாது போயுள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

பாதாளக்குழுக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கொலைகள், போதைப்பொருள் வியாபாரமும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பாதாளக்குழுக்களின் பேச்சாளர் போல் செயற்பட்டு வருகிறார்.

பாதாளக்குழுக்களினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலே அவர் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த அரசாங்கமானது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில், பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும் தவறுவதில்லை. எரிபொருட்களின் விலை ஏற்றமே மக்களுக்கு பாரிய கஸ்டமாக இருக்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் இடம்பெறும் இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் மக்களே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில  

    நாட்டின் பிரதான கட்சியொன்று தேர்தல் வேண்டாம் என்று தெரிவித்து, மக்கள் ஆணைக்கு அஞ்சி நீதிமன்றத்தை நாட

  • ரணில் வெளியேறாவிட்டால் பலவந்தமாக வெளியேற்றுவோம்! – மஹிந்த அணி  

    அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறாவிட்டால் அவரை பலவந்தமாக வெளியேற்றுவோம் என மஹிந்த ஆதரவ

  • நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி: முஜிபுர்  

    அதிகார மோகத்தால், நாட்டில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷ தரப்பின

  • பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஒன்றிணைந்த எதிரணி  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொலிஸ்ம

  • ஜனாதிபதி மீதான கொலைமுயற்சி: பிரதமர் – சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில், இன்று (செவ்வாய்க


#Tags

  • Price of fuels
  • எரிபொருட்களின் விலையேற்றம்
  • ஒன்றிணைந்த எதிரணி
  • சேகான் சேமசிங்க
  • பொரளை
    பிந்திய செய்திகள்
  • பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
    பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.