மின்சார வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
In இலங்கை December 30, 2019 4:29 am GMT 0 Comments 1739 by : Yuganthini

மாத்தளை- உகுவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
மின்சார வேலியொன்றில் சிக்கியே இவர்கள் மூவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.