News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. மிரட்டும் இந்தியாவிடம் பதுங்கிப் பாயுமா இலங்கை?

மிரட்டும் இந்தியாவிடம் பதுங்கிப் பாயுமா இலங்கை?

In கிாிக்கட்     March 15, 2018 7:39 am GMT     0 Comments     2203     by : Puvanes

இலங்கையில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுவரையிலும் 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வி அடங்களாக 6 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மற்றொரு பக்கம் இந்திய அணியில் இந்த வெற்றி இலங்கை அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ளன.

அதன்படி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களம் காணப்போவது இலங்கையா அல்லது பங்களாதேசா என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் எதிர்வரும் 18ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபடும்.

இலங்கையின் கௌரவம் மிக்க தொடரான இந்த சுதந்திரக்கிண்ணத்தைக் கைப்பற்றும் குறிக்கோளோடு இலங்கையும், எதிர் முனையில் ஏற்கனவே இலங்கையை தும்சம் செய்த பங்களாதேஷ் அணியும் மோதிக்கொள்ளவுள்ள நாளைய அரையிறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதேபோன்று அண்மைக்காலமாக தொடர்ந்தும் வெற்றி பெற்றுவரும் இந்தியாவிற்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறவேண்டியது முக்கியமாகும் எனவே இந்தியாவும் ஆக்ரோஷமாக விளையாடும் என்பது நிச்சயம். என்றாலும் இலங்கையும் தற்போது பலம் வாய்ந்த அணியாக உள்ளது என்பது இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது காட்டுகின்றது.

எனவே பதுங்கிய இலங்கை பங்களாதேசிடம் பாய்ந்து வெற்றி பெற்று இந்தியாவுடன் மோதி, இலங்கையின் கௌரவத்தை இலங்கையே தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது ஏற்கனவே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவது போன்று இத்தொடரையும் விட்டுக்கொடுக்குமா என்பது நாளை தெரியவரும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் தீர்மானம்  

    புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்!  

    இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ

  • எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க. அஞ்சாது – ஸ்டாலின்  

    எத்தனை கூட்டணி வந்தாலும் தி.மு.க.வை எவராலும் அசைக்கமுடியாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித

  • தெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு  

    தெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத

  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்  

    கீழ்த்தரமாக விமர்சித்த பா.ம.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதென மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி


#Tags

  • Haidas trophy
  • INDIA
  • Sri lanka
  • T20
  • இந்தியா
  • இலங்கை
  • சுதந்திரக்கிண்ணம்
  • ரி20
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.