மில்டன் சிறைச்சாலையில் போதைப்பொருளை உட்கொண்டு ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் தெற்கு ஒன்ராறியோவிலுள்ள மில்டன் நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அவை எவ்வாறு சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.