News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே விக்கி தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளார் – மஹிந்த அணி

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே விக்கி தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளார் – மஹிந்த அணி

In இலங்கை     October 25, 2018 9:09 am GMT     0 Comments     1535     by : Benitlas

மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே, வடமாகான முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளதாக, மஹிந்த அணி குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மக்ளிடையே கூட்டமைப்பு நன்மதிப்பை இழந்துள்ளதால், தனித்து போட்டியிட்டு மக்களின் வாக்குகளைப் பெற்றும் மீண்டும் கூட்டமைப்புடன் இணையும் திட்டம் சி.வியிடம் இருப்பதாக, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், திலும் அமுனுகம (Dilum Amunugama) தமது குடும்பத்தார் சகிதம் கலந்து கொண்டிருந்தார்.

சமய நிகழ்வுகளை அடுத்து வெளியில் வந்த அவரிடம், வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”கடந்த நான்கு வருடகாலமாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமக்கு எதனையும் செய்யவில்லை என்ற கவலை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஸவின் கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றன, அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் வாழ்க்கையைக் கொண்டுச் செல்வதற்கு வருமானம் கிடைத்தது.

இவை அனைத்தும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நன்மதிப்பையும் இழந்துள்ளது. இதனால் மக்களின் குழப்பத்தைப் பயன்படுத்தி சுயாதீனமாக களமிறங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று, மீண்டும் கூட்டமைப்புடன் கைக்கோர்த்து, வடக்கின் அதிகாரத்தைப் பெறும் சுழ்ச்சியாகவே நான் அதனைப் பார்க்கிறேன்.

இதுவரைக்காலமும் இந்த மாதிரியான அரசியல் செயற்பாடுகள் தெற்கில் மாத்திரமே நடைபெற்றது. இப்பொழுது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வடக்கிலும் ஆரம்பமாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வடக்கு – கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு!  

    வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தமிழ் தே

  • முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்  

    வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமி

  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!  

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன

  • ‘ஏக்கிய’ என்ற சொல்லுக்கு தமிழில் அர்த்தங்களில்லை – மஹிந்த அணி  

    ‘ஏக்கிய’ என்ற பதத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் அர்த்தங்கள் இல்லை என மஹிந்த ஆதரவு அணி

  • கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்  

    யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின


#Tags

  • சம்பந்தன்
  • தனிக்கட்சி
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு
  • மஹிந்த அணி
  • விக்கி
  • விக்னேஸ்வரன்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.