News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு: ரில்வின் சில்வா

In இலங்கை     October 21, 2018 5:00 pm GMT     0 Comments     1439     by : Ravivarman

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்போம் எனக் கூறி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கு சூழ்ச்சியில் மஹிந்த தரப்பினர் ஈடுபடுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினையையும், மக்களின் குழப்பத்தினையும் பயன்படுத்தி அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுக்க, தங்கள் வாரிசுகளை அரசணையில் ஏற்ற அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அத்துடன் தனக்கு விசுவாசமான அணியைக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வழியைத் தேடவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் பொய்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

கடந்த காலங்களில் இடைக்கால அரசாங்கம் குறித்து பேசப்பட்டது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அதில் வெற்றி பெறமுடியாமல் அரசாங்கத்திலிருந்து விலகிய ஒரு கூட்டமும் இருக்கிறது.

அவர்களுக்கும் அடுத்து என்ன செய்வதென்ற பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு மஹிந்தவிடமோ, மைத்திரியிடமோ நல்ல மதிப்பு இல்லை. எனவே இருவரையும் இணைத்து அதன் மூலம் தங்கள் அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் மக்களின் பிரச்சினையை கருத்திற் கொள்ளாது, பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முற்படுகிறார்கள்.

இவ்வாறு சுயநலநோக்கத்தோடு செயற்படுபவர்கள் குறித்தும், அவர்களின் சூழ்ச்சி குறித்தும் மக்கள் அவதானமாகவே செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்  

    நிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ

  • மைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்!- ராவய  

    அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள

  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!  

    ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்ச

  • “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!  

    “இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால

  • ரோஹன விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு!  

    கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோ


#Tags

  • JVP
  • மைத்திரி
  • ரில்வின் சில்வா
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.