News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இந்தியாவுடன் முரண்பட முடியாது: விஜயமுனி சொய்சா

இந்தியாவுடன் முரண்பட முடியாது: விஜயமுனி சொய்சா

In இலங்கை     August 22, 2018 5:05 am GMT     0 Comments     1430     by : Risha

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மிக நீண்டகால சிறந்த உறவு காணப்படுகின்ற நிலையில், மீனவப் பிரச்சினையினால் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினர் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு மகஜரொன்றை கையளித்ததுடன், தமது தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.

கடற்றொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை செவிமடுத்த பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், ”மீனவ சமூகத்தினர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தீர்த்து வைக்க முடியாது. யாழ். மாவட்டத்தை முதலாவதாக தெரிவுசெய்து பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் 5 துறைமுகங்கள், 20 இடங்களில் இறங்குதுறைகள் அமைத்தல், போன்ற அபிவிருத்திகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இந்த வருடத்தில் 17 இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம். 87 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனால், வரலாற்று ரீதியாக எம்முடன் பல தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு அயல்நாடாக இந்தியா விளங்குகின்றமையால், எமது உறவில் விரிசலை ஏற்படுத்த முடியாது.

எனவே, இந்திய அரசாங்கத்துடனும், இந்த மீனவ அமைப்புக்களுடனும் சுமூகமான பேச்சுக்களை நடத்தி, அதன்மூலம் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமென்பதே எமது நோக்கம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!  

    யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை

  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்  

    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட

  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்  

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென

  • பொருளாதாரத்தில் இந்தியா வலுவாகவுள்ளது – பிரதமர் மோடி  

    இந்தியா பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாகவுள்ளதாகவும் பொருளாதாரத்தில் 5 த்ரில்லியன் டொலரை விரைவில்

  • பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் நிறுத்த வேண்டும் : கங்குலி  

    புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் இந்தியா நிறுதிக்கொள்ள வேண்டும்


#Tags

  • Fisheries issue
  • Fisheries Minister
  • INDIA
  • Vijayamuni Soysa
  • இந்தியா
  • கடற்றொழில் அமைச்சர்
  • மீனவப் பிரச்சினை
  • விஜயமுனி சொய்சா
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.