முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது
In இங்கிலாந்து January 3, 2021 4:14 am GMT 0 Comments 1631 by : Jeyachandran Vithushan

முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து மத்திய லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஹைட் பூங்காவில் 200 முதல் 300 பேர் வரை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொது சுகாதார விதிமுறைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் பதினேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அடுக்கு நான்கு விதிகளின் கீழ் உள்ள பகுதிகளில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பொது வெளியில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவே வேண்டும் என்றும் பெருநகர பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.