News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. முத்தரப்புத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

முத்தரப்புத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

In கிாிக்கட்     March 18, 2018 5:21 pm GMT     0 Comments     1721     by : Litharsan

இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத்துக்கான முத்தரப்புத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷபிர் ரஹ்மான் 77 ஓட்டங்களையும், முஹமடுல்லா 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

167 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கை அடைந்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களையும், டினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களையும் மற்றும் பான்டே 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும், ஹஷன், இஸ்லாம், ரஹ்மான் மற்றும் ஷர்ஹர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்  

    இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக, அசராமல் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்றவர் ரிஷப் பந்த் என

  • கப்டில் சதம்: நியூஸிலாந்திடம் மீண்டும் வீழ்ந்தது பங்களாதேஷ் அணி!  

    பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற

  • உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம்பெற வேண்டும்: சுனில் கவாஸ்கர்  

    உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில், வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான விஜய் சங்கரையும் சேர்த்துக்கொ

  • தரமான அணியுடன் சிறப்பான வெற்றி: வெற்றியின் பின் ரோஹித் கருத்து  

    நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தரமான அணியுடன் களமிறங்கி சிறப்பான வெற்றியை பதி

  • விராட் கோஹ்லிக்கு திடீர் ஓய்வு  

    நியூசிலாந்து தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு திடீர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்


#Tags

  • Bangaladesh Team
  • Independent tripartite series
  • india team
  • இந்திய அணி
  • சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி
  • பங்களாதேஷ் அணி
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.