முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியமைக்கு தொற்று நோயியல் பிரிவே காரணம்
In இலங்கை February 18, 2021 3:18 pm GMT 0 Comments 1225 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்திற்கு தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியதற்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அச்சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்திற்கான தடுப்பூசி திட்டத்தை வெளியிடுமாறு தொற்றுநோயியல் பிரிவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்ற அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய வைத்தியர் ஹரித அலுத்கே, இதன் காரணமாக சுகாதார நிபுணர்களின் செயற்பாடுகள் தடைப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.