News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  • சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல
  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. முல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி

முல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி

In இலங்கை     July 20, 2018 9:41 am GMT     0 Comments     2054     by : Yuganthini

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை தொடர்பில் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“முல்லைத்தீவில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக விவசாயச் செய்கைகள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போயுள்ளது. மேலும் விவசாயத்தை வாழ்வாதாரதமாக கொண்டுவாழ்ந்த குடும்பங்கள் பெரும் கஸ்ட்டங்களை எதிர்நோக்கி உள்ளன.

இந்தவகையில் சிறுபோக நெற்செய்கையில் மாவட்டத்திலுள்ள 10 வரையான பெரிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் மூவாயிரத்து 87 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று  சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 995 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதற்கு முன்னைய காலங்களில் காணப்பட்ட விவசாய விளைச்சலை இன்று காணமுடியவில்லை.

இதனால் மாகாண விவசாயத் திணைக்களமானது வறட்சிக்காலங்களில் குறைந்தளவு நீரைக் கொண்டு  விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய தொழிநுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, சொட்டுநீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம் போன்ற மேட்டு நிலப்பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தவகையில் இரண்டாயிரத்து 105 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும், இதில் 300 ஏக்கர் வரையில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த போகத்தில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த போகத்தில் இலங்கையில் தேவையான நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்த மாவட்டமாக முல்லைத்தீவு காணப்பட்டது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்  

    சர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கை மையப்படுத்தி கையெழு

  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த

  • முல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ஆராய்வு  

    முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு அபிவ

  • செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவம் அச்சுறுத்தல்!  

    செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் முல்லைத்தீவு, கணுக்கேணியில் இன்று

  • UNHRC வழிகாட்டுதலில் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!  

    தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவ


#Tags

  • Drought
  • mullaithivu
  • paddy
  • நெற்செய்கை
  • முல்லைத்தீவு
  • வறட்சி
    பிந்திய செய்திகள்
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
    போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
    மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
    யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
  • இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
    இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
  • பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
    பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
  • புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
    புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
  • டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
    டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
  • பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
    பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
  • யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
    யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
  • இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)
    இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.