News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை: பிரதேசத்தில் பதற்றம்!

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை: பிரதேசத்தில் பதற்றம்!

In இலங்கை     October 21, 2018 1:48 pm GMT     0 Comments     1516     by : Ravivarman

அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணியில் மக்கள் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று முதல் மக்கள் குறித்த வீதியூடாக பயணம் செய்ய முடியாத நிலையை கடற்படையினர் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் ஆலயத்தில் இன்று காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதியால் சென்ற மக்களை இடைமறித்து விட்டார்கள்.

இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் சிறிது பதற்றநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரிடம் இச்சம்பவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

ஆனால் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது  

    இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இலங்கை மீனவர்க

  • சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!  

    சட்டவிரோத மணல் அகழ்வு கடந்த காலங்களில் உயிரிழப்புகள்வரை சென்றதை நாம் அவதானித்துள்ளோம். சட்டவிரோத மணல

  • கிண்ணியா அமைதியின்மை தொடர்பாக இன்றும் வாக்குமூலம் பதிவு!  

    திருகோணமலை – கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக இன்றைய தினமும்(வியாழக்கிழமை

  • திருகோணமலை கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு இராஜாங்க அமைச்சர் கண்டனம்  

    திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

  • திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக கண்டெடுப்பு (2ஆம் இணைப்பு)  

    திருகோணமலையில் கடற்படையின் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும், உயிரிழந்


#Tags

  • கடற்படையினர்
  • சாந்தி சிறீஸ்கந்தராசா
  • திருப்பலி
  • முள்ளிக்குளம்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.