News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்

கண்டி விவகாரத்தை ஐ.நா.-விற்கு எடுத்துச் செல்லவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்

In இலங்கை     March 17, 2018 7:59 am GMT     0 Comments     1504     by : Yuganthini

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கையாண்ட மெத்தனப்போக்கு ஆகியன குறித்து ஐ.நா.வின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ.நா. கூட்டத்தொடரில் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் பங்கேற்கவுள்ளார்.

அதன்படி, அவர் இன்று (சனிக்கிழமை) சுவிட்சர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும், சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி முன்வைக்கப்படவுள்ள கருத்துக்கள் தொடர்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே குறித்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

மேலும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற விடயங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரதும்  அசமந்தப்போக்கு குறித்து ம்மனித உரிமைகள் பேரவையில் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஐ.நா வின் முக்கிய அதிகாரி இலங்கைக்கு விஜயம்!  

    பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர

  • முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா  

    யானை சின்னத்தில் போட்டியிடாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை

  • அவசரமாக கூடுகின்றது முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீடம்  

    ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம் நாளைய தினம் கொழும்பில் அவசரமாக கூடவுள்ளதாக கட்சி வட்டாரத் தக

  • ரணிலுக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு : முஸ்லிம் காங்கிரஸ்  

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 நாடாளுமன்ற

  • எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயார்! – ரவூப் ஹக்கீம்  

    எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அ


#Tags

  • A.M.Faise
  • Muslim congress
  • United Nations Human Rights Council
  • ஏ.எம்.பாயிஸ்
  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
  • முஸ்லிம் காங்கிரஸ்
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.