News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
  1. முகப்பு
  2. உலகம்
  3. மூடப்பட்ட மலர்ச்சாலையில் 11 குழந்தைகளின் சடலங்கள்!

மூடப்பட்ட மலர்ச்சாலையில் 11 குழந்தைகளின் சடலங்கள்!

In உலகம்     October 14, 2018 10:18 am GMT     0 Comments     1368     by : Varshini

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில், மூடப்பட்ட நிலையில் காணப்படும் மலர்ச்சாலையொன்றிலிருந்து 11 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மிச்சிகன் மாநில உரிமம் மற்றும் ஒழுங்குமுறை விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதமொன்றை தொடர்ந்து, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சென்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிதைந்த நிலையில் 9 குழந்தைகளின் சடலங்கள் கார்ட்போர்ட் பெட்டியொன்றில் ஒன்றாக போட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்தன. இரண்டு குழந்தைகளின் சடலங்கள் சவப்பெட்டியில் காணப்பட்டுள்ளன.

போலியாக சீல்வைக்கப்பட்ட நிலையில், குறித்த சடலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன என டெட்ரொய்ட் நகர பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், குழந்தைகளின் பெற்றோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மிச்சிகன் மாநில உரிமம் மற்றும் ஒழுங்குமுறை விவகார அதிகாரசபையின் தகவலின் பிரகாரம், குறித்த மலர்ச்சாலை காணப்படும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பதப்படுத்தப்பட்ட மற்றும் சில சிதைந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட மலர்ச்சாலை மீது உரிமம் மற்றும் நிதிமுறைகேடு தொடர்பான பல முறைகேடுகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • eastern Detroit.
  • shuttered funeral home
  • மிச்சிகன் மாநிலம்
  • மூடப்பட்ட மலர்ச்சாலை
    பிந்திய செய்திகள்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
    நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.