மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் லோபஸ்ஸுக்கு (Andres Lopez) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’ என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே மெக்ஸிகோவுக்கு ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக நாளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் தொலைபேசி வழியாக பேசவுள்ளதாகவும் மெக்ஸிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.