மேலும் ஒரு விசேட மேல் நீதிமன்றம் – ரணில்
மேலும் ஒரு விசேட மேல் நீதிமன்றத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நிதிமன்றத்தில் இதுவரை இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குற்றவாளிகளுக்கு நல்லாட்சியில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.