மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா!

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
உட்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஜூன் 29ஆம் திகதி 59 செயலிகளும் செப்டம்பர் இரண்டாம் திகதி 118 செயலிகளும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.