மேலும் 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 405 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.02 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேபோன்று கட்டாரிலிருந்து 67 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.