மேல் மாகாணத்திற்கு வெளியே துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை!

மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் துணைக் கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் மூலங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.