மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் பதிய கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து என எச்சரிக்கை
In இலங்கை December 29, 2020 9:56 am GMT 0 Comments 1498 by : Dhackshala

பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் மகேஸ் பாலசூரிய, இவர்கள் பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே தாங்கள் மாவாட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தினை கட்டுப்படுத்துமாறும் மேல் மாகாணத்திலிருந்து மக்கள் வெளியே செல்வதை தடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த பகுதிகளில் புதிய நோயாளர்கள் உருவாகும் ஆபத்தும் சிறிய கொத்தணிகள் உருவாகும் ஆபத்தும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரித அன்டிஜென் சோதனைக்கு பதில் இந்த மாவட்டங்களில் பிசிஆர் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.