மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுமா?
In இலங்கை December 20, 2020 7:41 am GMT 0 Comments 1501 by : Dhackshala

மேல் மாகாண பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்த இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பார் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கொரானா தொற்று ஒழிப்புடன், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்களுடன் அவர்களின் பகுதிகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுவதா, இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சரினால் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.