News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன் ஆவேசம்!

மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன் ஆவேசம்!

In ஆசிரியர் தெரிவு     November 4, 2018 3:36 pm GMT     0 Comments     2780     by : Ravivarman

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில், அதாவது தமிழ் மக்களது வாக்குப் பலத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கூட்டமைப்பைக் கூறுபோட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இது அவரது அரசியல் வாழ்வின் அழிவின் ஆரம்பமாகும். இதனை நாம் பகிரங்கமாகவே அறிவிக்கின்றோம். எமது உப்பினைத் தின்று எமது கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவரை அமைச்சராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

இவ்வாறான மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒருபோதுமே எமது ஆதரவு இருக்காது. எமது மக்களைக் கூறுபோடுவதற்காக மைத்திரிபால சிறிசேனவை நாம் ஜனாதிபதி ஆக்கவில்லை.

தேர்தலில் தோற்றிருந்தால் ஆறடி நிலத்திற்குள் போயிருப்பேன் எனக்கூறிய சிறிசேனவைக் காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லவா?

இன்று எங்களையே பிரித்துப்போடும் சூழ்ச்சி செய்யும் கபட நாடகமாடும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மாறியிருக்கின்றார். அது அவரது அழிவிற்கான ஆரம்பம்” என அவர் மிகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி  

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளையா அல்லது பொது மக்களையா பாதுகாக்கிறது என ஜனாதிபதி மைத்திர

  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!  

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன

  • நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி  

    உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும

  • தமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்  

    தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண

  • அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் – இமானுவேல் ஆர்னோல்ட்  

    அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்


#Tags

  • M.A.Sumanthiran
  • இறுதிக்காலம்
  • எம்.ஏ.சுமந்திரன்
  • கூட்டமைப்பு
  • மைத்திரிபால சிறிசேன
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
    நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.