மொன்டே கார்லோ டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

டென்னிஸ் உலகில் நூற்றாண்டுகள் பழமையான மொன்டே கார்லோ டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டானில் மெட்வெடேவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை டானில் மெட்வெடேவ் 6-3 என கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய நோவக் ஜோகோவிச், 6-4 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனால் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடிய டானில் மெட்வெடேவ் 6-2 என செட்டைக் எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.