யாழிற்கு விஜயம் செய்யவுள்ள இராணுவத் தளபதி
In இலங்கை December 16, 2020 8:50 am GMT 0 Comments 1518 by : Dhackshala

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (வியாழக்கிழமை) யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர், வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியின் நெறிப்படுத்தலில் இந்தக் குளம் புனர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் விவசாய பயன்பாட்டுக்கு பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த குளத்தினை இராணுவத்தினர் கடந்த இரண்டு மாதங்களாக புனர் நிர்மாணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.