யாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்!

யாழில் வன்முறையாளர்களான ஆவா குழுவினரால் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதலுக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில் பத்து மோட்டார் சைக்கிளில் பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவொன்று தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.